விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பேன்சி ரக தொடர் வெடிகளையும் அதில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களையும் கண்டுகொள்ளாமல், சரவெடி செய்யும் சிறிய தொழிற்சாலைகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் மூடி வருவதை கண்டித்தும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.