அதிகாரத்தைக் கைப்பற்றவே தைவான் எல்லையில் போர் பயிற்சி மேற்கொண்டு வருவதாக சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
தைவான் தனிநாடாக இருந்தாலும், அதை தங்களது ஒருங்கிணைந்த பகுதியாகவே சீனா கருதுகிறது.
அதேசமயம், தைவான் இறையாண்மைமிக்க தேசம் என புதிய அதிபர் வில்லியம் லாய் அண்மையில் சூளுரைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவான் எல்லையில் கடந்த இரு தினங்களாக விமானம், கப்பலை கொண்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.