தேனியில் உள்ள திருமலை ராயப்பெருமாள் திருக்கோயிலில் விசாகத் திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா என்ற முழக்ககத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.