ஆந்திர மாநிலம், கோண்சீமா பகுதியில் பெண்ணின் பித்தப்பையில் உருவாகிய 570 கற்களை மருத்துவர்கள் அகற்றினர்.
அமலாபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வயிற்று வலியால் அவதிபட்டு வந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பித்தப்பையில் ஏராளமான கற்கள் இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அதன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் பித்தப்பையில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் எடுத்தனர்.