திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலில் சுவாமிக்கு மலர் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானலில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதில் கொடைக்கானல் இன்டர்நேஷனல் ஹோட்டல் நிர்வாகம் சார்பில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த மலர் வழிபாட்டில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.