தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிக்குள் 2-வது நாளாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி குற்றாலம், கடையநல்லூர், சங்கரன்கோயில் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 27 வனக்குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கணக்கெடுப்பில் தெரியவரும் யானைகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள் மாவட்ட வன அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.