குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
குற்றால அருவிகளில் 17 ஆம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஒரு சிறுவன் உயிரிழந்ததால், சுற்றுலாப்பணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
நீர்வரத்து குறைந்ததால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி, பராமரிப்பு பணி காரணமாக மெயின் அருவியை தவிர அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை தொடர்வதால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனையடுத்து அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.