டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கோரி ஒட்டப்பட்ட போஸ்டர் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி பல்லைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள சுவற்றில் மே 25ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை புறக்கணிக்க வேண்டும் என வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மேலும், பல்லைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவை புறக்கணிக்க கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.