பப்புவா நியூ கினியா தீவின் ஏங்கா மாகாணம் கவுகோளம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர்.
தலைநகர் மொர்சிபியில் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.
இங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்ணிமைக்கும் நேரத்தில் பலியானதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஏராளமானோர் மண்ணில் புதையுண்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.