கோடை விடுமுறை முடிந்து வரும் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிகல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, வரும் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாளில் பள்ளிகளைத் திறக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 6-ம் தேதி மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்பதாக, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.