வரும் நாட்களில் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற விவா டெக் மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய அவர்,
வரும் நாட்களில் பொழுதுபோக்குக்காக வேண்டுமானால், நாம் ஏதாவது தொழிலை செய்யலாம் என்றும், பெரும்பாலான வேலைகளை ஏஐ தொழில்நுட்பம் ஆக்கிரமித்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.
இதை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடுகளும் அதன் பணியாளர்களுக்கு சராசரி ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் யோசனை தெரிவித்தார்.