பிரிட்டன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அந்தக் கட்சியின் மூத்த தலைவரான மைக்கேல் கோவ், மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதேபோல, கேபினட் அமைச்சருக்கு நிகரான பதவிகளை வகித்த ஆன்ட்ரியா லீட்சம் என்ற பெண் தலைவரும் மீண்டும் தேர்தல் களம் காண மறுத்துவிட்டார். அந்த வகையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 78 விஐபிக்கள் மீண்டும் போட்டியிட தயங்குகின்றனர்.
பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி இன்மை உள்ளிட்ட கன்சர்வேடிவ் ஆட்சி மீதான பல்வேறு விமர்சனங்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
கடந்த 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் இப்படித்தான் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிரான அலை வீசியது. அப்போது 72 விஐபி வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட மறுப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.