உடல் உறுப்புகளை பதப்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் விதமாக இறந்த நபர்களின் உடல் உறுப்புகளை மருத்துவக்கல்லூரிகளில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள்.
ஆனால் இந்த உடல் உறுப்புகள் சில வருடங்களுக்கு மட்டுமே கெட்டுப்போகாமல் இருக்கும்.
இந்நிலையில் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல் உடல் உறுப்புகளை பதப்படுத்தும் ‘பைபர் கிளாஸ் எம்பட்டிங்’ என்ற புதிய உக்தியை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறையை சேர்ந்த மருத்துவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலசங்கர் இந்த நவீன யுத்தி மருத்துவ படிப்பில் ஒரு புதிய சகாப்தமாக அமையும் என தெரிவித்தார்.