ஈரோட்டில் ஐடி ஊழியரின் வீட்டுக்குள் புகுந்து நகைக்கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். ஐடி ஊழியரான இவர் அதிக வெப்பம் காரணமாக வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கியுள்ளார்.
காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 38 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தென்றல் நகரை சேர்ந்த மகேந்திரன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.