ரஃபா நகரில் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், காசா விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்கு தென் ஆப்பிரிக்கா கொண்டுவந்தது.
அதன்படி, ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், காசாவுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க இஸ்ரேல் அதன் எல்லைகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது.