தேனி மாவட்டம், போடி அருகே புதிதாக திறக்க இருக்கும் மதுக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலசொக்கநாதபுரம் பகுதியில் அரசு மதுபான பார் செயல்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு அந்த மதுபானக்கடை மூடப்பட்டது.
இந்நிலையில் அதே இடத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானக்கூடம் தொடங்க இருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், இங்கு வரும் மதுப்பிரியர்களால் மக்களுக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தனியார் மதுக்கூடம் திறக்க அனுமதி அளிக்கக் கூடாது எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.