தூத்துக்குடி அருகே கடலோர காவல்படையினரின் பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் 5 ரோந்து கப்பல்கள், ஒரு டோர்னியர் விமானம், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தாலோ, நடுக்கடலில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தாலோ எவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.