சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் உள்ள வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
பிர்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் வெடி மருந்து ஆலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது.
இதில் ஒருவர் உயரிழந்ததாகவும், 6 பேர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.