கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகையாக இந்திய நடிகை அனசுயா செங்குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதைத் தட்டிச் சென்றார்.
இந்தப் பிரிவில் இந்திய நடிகை ஒருவர் விருது பெறுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 2015-இல் வெளியான ‘தி ஷேம்லெஸ்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அனசுயா செங்குப்தா இந்த விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
விருதைப் பெற்றுக் கொண்ட அவர், அதை விளிம்புநிலை மக்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார்.