தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவி உள்ள பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.