நீலகிரி அருகே சர்வதேச பள்ளியில் நடைபெற்ற குதிரை சாகச போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மத்திய மனிதவள மேம்பாடு துறையின் கீழ் இயங்கும் இந்த பள்ளியின் 166-வது ஆண்டு விழாவையொட்டி, குதிரை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குதிரைகள் மீது அமர்ந்தும், சவாரியாக சென்றும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டி அசத்தினர்.
மேலும், மாணவர்கள் ஆடை அலங்காரம் மற்றும் மாறுவேட போட்டியிலும் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.