திருச்சி கொள்ளிடம் பாலத்தில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சி ஒத்தக்கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது.
அப்போது கொள்ளிடம் பாலத்தின் சென்டர் மீடியனில், இளைஞர் ஒருவர் சர்க்கஸில் சாகசம் செய்வது போல இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.
அதனை சாலையின் இருபுறமும் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில், இளைஞரின் மீது நடவடிக்கை எடுக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.