“நாட்டில் வேற்றுமையை ஏற்படுத்துவதுதான் திமுகவின் மிகப்பெரிய பணியாக உள்ளது” என முன்னாள் ஆளுநரும், தென்சென்னை பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தோல்வி பயத்தில் உள்ளதுபோல மாயத் தோற்றத்தை இண்டியா கூட்டணி ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
“பிரதமர் மோடி கூறும் பல தகவல்கள் திரித்து பேசப்படுகிறது” என குறிப்பிட்டார். மேலும், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருப்பார்” என்றும் “சேது சமுத்திர திட்டங்களை திமுக ஆதரித்தபோது, அதனை எதிர்த்தவர் ஜெயலலிதா” என பல்வேறு உதாரணங்களை சுட்டிக் காட்டினார்.