ஈரோட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்றோரு தரப்பினருக்கும், ஹரீஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி என்ற நபர் ஹரீஷின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.