கன்னியகுமரியில் கனமழை குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது கனமழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.