திருப்பத்தூரில் வானிலிருந்து மர்ம பொருள் விழுந்து 5 அடி அளவிலான பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராவி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் 5 அடி அளவிலான பள்ளம் ஏற்பட்டது.
மேலும் பள்ளத்தில் இருந்து அதிக வெப்ப அனல் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதனையடுத்து பள்ளத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதைச் சுற்றி வேலி அமை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார்.