மக்களவை தேர்தலையொட்டி வாக்குகள் எண்ணப்படும் ஜூன் 4-ஆம் தேதி பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்க மக்கள் தங்களது மனதளவில் முடிவு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஒருபுறம் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த மோடியும், மற்றொரு புறம் சில்வர் ஸ்பூனுடன் பிறந்த இரண்டு இளவரசர்களும் போட்டியிடுவதாக ராகுல் காந்தியையும், அகிலேஷ் யாதவையும் அமித் ஷா மறைமுகமாக விமர்சித்தார்.
பின்னர் சீலாம்பூரில் பிரசாரம் செய்த அவர், ராம பக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்களுக்கும், ராமருக்கு கோவில் எழுப்பியவர்களும் இடையிலான போர்தான் இந்தத் தேர்தல் என்று குறிப்பிட்டார்.