இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி எந்த ஒரு மாநில அரசும் செயல்பட முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கேரளா அரசு புதிதாக கட்டும் தடுப்பணை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார்.
மேலும், 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபின் தமிழகத்துக்கு வருவார் என்றும் அவர் கூறினார்.