விருதுநகரில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பட்டாசு தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகரில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சிறு பட்டாசு ஆலைகள் மூடிப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட பட்டசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.