திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 51 ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி கான்வென்ட் சாலையில் சிறுமலர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1973ம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையில் கல்வி பயின்ற மாணவர்கள் ஒன்றாக சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
அப்போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட அனைவரும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.