மத்தியில் பிரதமர் மோடி அரசின் கீழ் பட்ஜெட்டில் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் தொடர்ந்து சிறப்பான முறையில் செலவிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தயாரிப்பிலும், அதைத் தாக்கல் செய்வதிலும் வெளிப்படைத் தன்மை கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ள அவர், பல்வேறு சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை மத்திய அரசு அதிகம் பயன்படுத்துவதாகவும் அந்தப் பதிவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.