நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், முதன்முறையாக தனது பெற்றோரை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதைத் தேர்தல் ஆணையத்தில் விஜய் பதிவு செய்தார்.
நடிகர் விஜய் தனது பெற்றோரை கண்டுகொள்ளவில்லை என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
விஜயின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.