பிரிட்டன் பொதுத் தேர்தலில் முதல் கருப்பின பெண் எம்.பி.யான டயான் அபோட் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அவர், இனவெறியைத் தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்ததற்காக கட்சியிலிருந்து ஓராண்டுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கு வாய்ப்பளிக்க தொழிலாளர் கட்சி தலைமை மறுத்துவிட்டது.