தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அதிபர் சிறில் ராமபோசா தலைநகர் ஜோஹன்னஸ்பர்க்கில் தனது வாக்கைச் செலுத்தினார்.
அந்நாட்டில் நிறவெறி முடிவுக்கு வந்ததையடுத்து முதல் கருப்பின அதிபராக நெல்சன் மண்டேலா பதவிக்கு வந்தார்.
அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்தான் அங்கு 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.
தற்போதைய அதிபர் சிறில் ராமபோசா தலைமையிலான அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதால், அநேகமாக ஆட்சிமாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.