திருச்சி கொள்ளிடம் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ம் தேதி கொள்ளிடம் பால தடுப்பு சுவற்றின் மீது இருசக்கரம் வாகனம் ஓட்டிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த நபர் குருமூர்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து குருமூர்த்தி மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.