E-COMMERCE சந்தையில் கால் பதிக்கும் அதானி?
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

E-COMMERCE சந்தையில் கால் பதிக்கும் அதானி?

Web Desk by Web Desk
May 29, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி PAY TM சேவை வழங்கும் ONE 97 COMMUNICATIONS நிறுவனத்தின் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த செய்தி உண்மையில்லை என்று , ONE 97 COMMUNICATIONS நிறுவனமும் , அதானி குழுமமும் ஒரே நேரத்தில் மறுப்பு தெரிவித்துள்ளன. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய இ காமர்ஸ் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இ காமர்ஸ் சந்தையில், டிஜிட்டல் வர்த்தகத்தில், ஆன்லைன் ஷாப்பிங் வசதியை வழங்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அதானி குழுமம் , இ காமர்ஸ் தளத்தைத் தொடங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது

இதற்காக , ஓபன் நெட்வொர்க் எனப்படும் ONDC நிறுவனத்துடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இந்திய அரசால் நடத்தப் படும் ஒரு இ காமர்ஸ் தளம் தான் ONDC நிறுவனம்.

ONDC-யின் அனுமதி கிடைத்தால், அதானி குழுமம் , பல்வேறு வர்த்தகச் சேவைகளைத் தனது ஆப் மூலம் வழங்க முடியும்.

இதற்காக UPI சேவைக்கும் அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சந்தையில் இருக்கும், GOOGLE PAY , PAY TM ,PHONE PE ,போன்ற டிஜிட்டல் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் அதானி குழுமம் போட்டியிட தயாராகி விட்டது என்றே தெரிகிறது.

மேலும் கிரெடிட் கார்டு சேவையை வழங்கவும் அந்நிறுவனம் முடிவெடுத்து சில வங்கிகளுடன் பேச்சு வார்த்தைகளையும் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது.

இந்த திட்டத்துக்கு 16,600 கோடி ரூபாய் நிதி திரட்ட அதானி குழும நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மூலமாக , இந்த நிதி திரட்டப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, அகமதாபாத்தில் அதானியை Paytm தலைமை செயல் அதிகாரி விஜய் சர்மா சந்தித்ததாகவும் , மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து முதலீட்டு நிதி பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்த்தியதாகவும் தகவல்கள் வெளியாயின.

PAY TM நிறுவனத்தின் பங்குகளை அதானி வாங்கப் போகிறார் என்று ரீதியில் தகவல் வெளியானதும், வணிக சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த செய்தி உண்மையில் என்று PAY TM மற்றும் அதானி நிறுவனங்கள் உடனடியாக மறுத்துள்ளன. மேலும் , PAY TM பங்குகளை அதானிக்கு விஜய் சேகர் ஷர்மா விற்கவில்லை என்று தெளிவுபடுத்தியதால் Paytm பங்கு விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே சமயம் அதானி குழுமத்தின் பங்கு விலையில் சரிவு ஏற்பட்டது.

முன்னதாக, ரிசர்வ் வங்கியின் தடை காரணமாக, Paytm இன் வருமானம் வெகுவாக குறைந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. மார்ச் காலாண்டில் மட்டும் 549 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது PAY TM நிறுவனம்.

ஆன் லைன் வர்த்தகம், இ காமர்ஸ் டிஜிட்டல் வர்த்தகம் , டிஜிட்டல் வர்த்தக செயலிகள் தொழில்நுட்பத்தில் ஏற்படும் சந்தைப் போட்டியால் , மக்களுக்குத் தான் லாபமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Tags: Adani to set foot in E-COMMERCE market?
ShareTweetSendShare
Previous Post

GOLDEN TRIANGLE மர்மம்? சீன மாஃபியா கும்பலிடம் சிக்கும் இந்திய இளைஞர்கள்

Next Post

மின்னணு சாதனங்களின் விலை கடும் சரிவு பின்னணி என்ன?

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies