உளவு செயற்கைகோளை தொடர்ந்து விண்ணில் செலுத்துவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தரப்பில் அண்மையில் செலுத்தப்பட்ட இரண்டாவது உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்து சிதறியது.
இதனால் தாங்கள் துவண்டு போகவில்லை என்று கூறியுள்ள கிம் ஜாங் உன், உளவு செயற்கைகோளை விண்ணில் நிறுத்துவதன் மூலம் எதிரிகளைக் கண்காணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.