ஈரோட்டில் பயிற்சி மேற்கொண்டிருந்த கால்பந்து வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரம்பட்டு பகுதியை சேர்ந்த கால்பந்து விரரான சுப்பிரமணி தினமும் காலையில் கால்பந்து பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் சங்குநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்ட அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.