சென்னை அம்பத்தூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அவர்கள் கர்ப்பிணிகளுக்கு வழங்கக் கூடிய நைட்ரோவிட் எனும் மாத்திரையை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 800 மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.