மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் பயிர்களை பாகுபலி யானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் சமயபுரம் கிராமத்தில் பாகுபலி யானை உலா வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் விவசாயிகள் சோலார் மின்வேலி அமைத்தனர்.
இதனையடுத்து யானை வழிமாறி செல்ல இதுதான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக விவசாயிகள் பயிர்களை பாகுபலி யானை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.