தேனி மாவட்டம் சின்னமனூரில் கோடை ஏர் உழவன் திருநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த இரட்டை மாட்டு வண்டி வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.