விருப்ப ஓய்வு பெறாத தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிவடைய உள்ளதால், விருப்ப ஓய்வு பெற தொழிலாளர்களுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் இதுவரை அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.