அரியலூரில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த சிறுவன் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆண்டிமடம் அடுத்த பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய 8 வயது மகன் சுனில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சாலையோரம் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து சிறுவன்மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.