விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டு வியாபாரி உயிரிழந்தார்.
சாத்தூர் அருகே சல்வார்பட்டியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி கருப்பசாமி, சாத்தூர் மேட்டமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், கருப்பசாமி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் மீது சாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.