துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்லோவோகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ, உடல்நலம் தேறி வீடு திரும்பினார்.
கடந்த மே 15-ஆம் தேதி அவர் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலம் சீரானதையடுத்து, வீடு திரும்பியதாக ஸ்லோவோகியா துணை பிரதமர் ராபர்ட் கலினாக் தெரிவித்துள்ளார்.