இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா தீவில் உள்ளூர் நேரப்படி, இன்று பிற்பகல் 2.20 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சேத விவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.