மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் நாற்காலியில் அமரும் முதல் தலைவர் மோடி என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆற்றிய பணியால் உலக அரங்கில் இந்தியாவிற்கு மரியாதை கிடைத்துள்ளதாக கூறியுள்ள அவர், வளமான இந்தியாவை உருவாக்கி, சிறப்பான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.