நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையார் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி கார் பருவ சாகுபடிக்காக காரையார் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததன் காரணமாக அணையின் நீர் இருப்பு மிகவும் குறைவாக காணப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக ஆளுநரின் உத்தரவுப்படி 18 ஆயிரத்து 90 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 120 நாட்களுக்கு பாபநாசம் காரையார் அணையில் இருந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தண்ணீரை திறந்து வைத்தார்.