உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரக்கன்று நட்டுவைத்தார்.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமது மனைவி லட்சுமி ரவியுடன் ஆளுநர் மாளிகையில் மரக்கன்று நட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பருவநிலை மாற்றப் பிரச்னையை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் மரக்கன்று நட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.