தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகவலின்பேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் முரளி என்பவரது கடையில் இருந்த 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு புகையிலை பொருட்களை கடத்த உதவிய இருவர் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.